2011-03-08 16:13:25

வத்திக்கான் அதிகாரி :அமைச்சர் ஷபாஸ் பாட்டி உண்மையான மறைசாட்சி


மார்ச்08,2011. பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ள சிறுபான்மை அமைச்சர் Shahbaz Bhatti உண்மையான மறைசாட்சி என்று பாராட்டினார் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran.
இம்மாதம் 2ம் தேதி இசுலாமாபாத்தில் கொல்லப்பட்ட அமைச்சர் Shahbaz Bhatti யின் ஆன்ம சாந்திக்காக உரோம் பாகிஸ்தான் கத்தோலிக்கச் சமூகத்தினருடன் இணைந்து திருப்பலி நிகழ்த்திய கர்தினால் Tauran, கடந்த நவம்பரில் லாகூரில் ஷபாசைச் சந்தித்த போது அவர் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்.
நான் கொல்லப்படுவேன் என்பது தெரியும், ஆயினும் கிறிஸ்துவுக்காகவும் பல்சமய உரையாடலுக்காகவும் நான் என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் என்று ஷபாஸ் கூறியதைக் குறிப்பிட்டுப் பேசினார் கர்தினால் Tauran.
இந்த அமைச்சருடைய வார்த்தைகள் செயலோடு எப்போதும் ஒத்திணங்கிச் சென்றன என்றுரைத்த கர்தினால் Jean-Louis Tauran, இத்தகைய உண்மையான மறைசாட்சியை நாம் கொண்டிருப்பதற்குக் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.