மனித உரிமைகளுக்காகப் போராடும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கப் பெண்களுக்கு ஐ.நா.அதிகாரி
வாழ்த்து
மார்ச்08,2011. மனித மாண்பு, நீதி, மனித உரிமைகள் ஆகியவற்றைத் தங்களுக்காகவும் தங்களோடு
வாழ்வோருக்காவும் கிடைப்பதற்குத் தைரியத்தோடு போராடும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கப்
பெண்களை உலகின் அனைத்துப் பெண்களுடன் இணந்து வாழ்த்துவதாகத் தெரிவித்தார் ஐ.நா.அதிகாரி
நவநீதம்பிள்ளை. இச்செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக மகளிர் தினத்திற்கெனச்
செய்தி வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் அவை இயக்குனர் நவநீதம்பிள்ளை, எகிப்திலும் டுனிசியாவிலும்
பெண்கள் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் மற்றும் தெருக்களிலும் நின்று போராடுகின்றனர் என்றார். இவ்விரு
நாடுகளிலும் பெண்கள் இவ்வாறு செயல்படுவதற்குக் கல்வியே உதவியுள்ளது எனவும் நவநீதம்பிள்ளை
தெரிவித்தார்