2011-03-08 16:10:49

நிலநடுக்கத்தால் கடுமையாயப் பாதிக்கப்பட்ட நியுசிலாந்து மக்களுக்கு, திருத்தந்தை உதவி


மார்ச்08,2011. நியுசிலாந்து நாட்டில் நிலநடுக்கத்தால் கடுமையாயப் பாதிக்கப்பட்ட Christchurch மக்களுக்கு, Cor Unum என்ற திருப்பீட மனிதாபிமான அமைப்பின் வழியாக ஐம்பதாயிரம் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார் திருத்தந்தை.
நியுசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான Christchurch ஐக் கடந்த மாதம் தாக்கிய நிலநடுக்கத்தில் 160க்கும் அதிகமானோர் இறந்தனர். பரவலாகக் கடும் சேதங்களும் ஏற்பட்டன.
Christchurch ஆயர் Barry Jonesக்குத் திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்தியில் பாதிக்கப்பட்ட மக்களுடனானத் தனது ஆன்மீக ரீதியிலான ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.