தொலைகாட்சியில் இயேசு குறித்து விசுவாசிகள் கேட்கும் கேள்விகளுக்குத் திருத்தந்தை பதில்
மார்ச்08,2011. இவ்வாண்டு புனித வெள்ளிக்கிழமையன்று இத்தாலிய அரசு தொலைகாட்சியில் விசுவாசிகள்
கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவிருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். வருகிற
ஏப்ரல் 22ம் ததியன்று “Rai Uno” என்ற இத்தாலிய தொலைக்காட்சிச் சேனலில் “A Sua Immagine”
என்ற நிகழ்ச்சியில் இயேசு குறித்து விசுவாசிகள் கேட்கும் மூன்று கேள்விகளுக்குத் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் பதில் அளிக்கவிருக்கிறார் மேலும், “நாசரேத்தின் இயேசு: புனித வாரம்
- எருசலேம் நுழைவிலிருந்து உயிர்ப்பு வரை” என்ற தலைப்பிலான திருத்தந்தை 16ம் பெனடிக்டின்
புத்தகம் மார்ச் 10, இவ்வியாழனன்று வெளியிடப்படவுள்ளது. நாசரேத்தூர் இயேசு என்ற திருத்தந்தையின்
முதல் புத்தகம் ஏற்கனவே வெளியிடப்பட்டு அமோக விற்பனையிலும் வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும, தவக்காலம் தொடங்கும் இப்புதனன்று பாரம்பரியச் சாம்பல் புதன் பவனியை உரோம்
Aventine குன்றிலுள்ள புனித ஆன்செல்ம் ஆலயத்திலிருந்து புனித சபினா பசிலிக்காவுக்குத்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழிநடத்திச் செல்வார்