ஐவரிகோஸ்டில் இரண்டு மசூதிகள் அழிக்கப்பட்டதற்கு கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம்
மார்ச்08,2011. ஐவரிகோஸ்ட் நாட்டில் இரண்டு மசூதிகள் அழிக்கப்பட்டதற்கு அந்நாட்டுக் கத்தோலிக்க
ஆயர்களும் பிற மதத் தலைவர்களும் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். போர்ச்சூழல்
காணப்படும் ஆப்ரிக்க நாடான ஐவரிகோஸ்டில் இரண்டு அந்நாட்டிற்கானத் திருப்பீடத் தூதர் பேராயர்
அம்புரோஸ் மாத்தா உள்ளிட்ட பல மதத் தலைவர்கள் பல மசூதிகளைப் பார்வையிட்டு சமயங்களுக்கிடையே
அமைதிக்கானத் தங்கள் அர்ப்பணத்தை வெளியிட்டுள்ளனர். ஐவரிகோஸ்டின் தற்போதைய கலவரநிலை
முற்றிலும் அரசியல் ரீதியானது, எனவே இதனைச் சமயப் பிரச்சனைகளுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது
என்று அந்நாட்டின் பல மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்