2011-03-07 15:41:56

நியூசிலாந்தில் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிய திருச்சபைகள் உதவி.


மார்ச் 07, 2011. நியூசிலாந்தில் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென ஜப்பான், சைனா மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் நிதியுதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அந்தந்த நாடுகளின் தலத்திருச்சபைகளால் திரட்டப்படும் இவ்வுதவிகள் நியூசிலாந்தின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்.
பிப்ரவரி மாதம் 22ந்தேதி நியூசிலாந்தில் இடம்பெற்ற நில அதிர்ச்சியால் 161 பேர் உயிரிழந்ததாக அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நில அதிர்ச்சியால் 2500பேர் வரை காயமடைந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.