2011-03-05 14:24:44

மார்ச் 8 அனைத்துலக பெண்கள் தினம், பான் கி மூனின் செய்தி


மார்ச்05,2011. சமுதாயத்தில் பெண்களின் முழுமையான, சமத்துவமான பங்கெடுப்பின் மூலமாக மட்டுமே வளர்ச்சியும் அமைதியும் நீதியும் நிறைந்த சமூதாயத்தை அமைக்க முடியும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மார்ச் 8, வருகிற செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்படும் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், இவ்வாண்டில் இந்த உலக தினம், பெண்களுக்குக் கல்வி, பயிற்சி மற்றும் தொழிநுட்பத்தில் சமவாய்ப்பு வழங்கப்படுவதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
அனைத்துலக பெண்கள் தினம் கடைபிடிக்கத் தொடங்கப்பட்டதன் நூறாம் ஆண்டு, இந்த 2011ம் ஆண்டில் கடைபிடிக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர், பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் இவ்வாண்டில் கொண்டாடப்படுகின்றது, எனினும், பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே இன்றும் இருக்கின்றனர் என்றார்.







All the contents on this site are copyrighted ©.