2011-03-04 16:26:42

கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் அமைச்சர் பாட்டியின் இறுதி அடக்கச் சடங்கு


மார்ச் 04,2011. பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஷபாஸ் பாட்டியின் இறுதி அடக்கச் சடங்குத் திருப்பலி கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் இவ்வெள்ளியன்று இஸ்லாமாபாத் பாத்திமா அன்னைப் பேராலயத்தில் நடைபெற்றது.
ஆயர் அந்தோணி லோபோ, இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் ரூஃபின் அந்தோணி மற்றும் 18 குருக்கள் இணைந்து நடத்திய இந்தத் திருப்பலியில், பாகிஸ்தான் பிரதமர் Yousaf Raza Gilani உட்பட பல அரசு அதிகாரிகளும், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இஸ்லாமாபாத்தில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த 42 வயது ஷபாஸ் பாட்டி, தேவநிந்தனைச் சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தவர்.
கத்தோலிக்கரான அமைச்சர் ஷபாஸ் பாட்டி மார்ச் 2, இப்புதன் உள்ளூர் நேரம் பகல் 11.20 மணியளவில் தனது வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறியவுடன் முகமூடி அணிந்த நான்கு பேர் துப்பாக்கிகளுடன் அவரின் வாகனத்தைச் சூழ்ந்து குண்டுகளைச் சரமாரிச் சுட்டதில் அவர் இறந்தார். இவ்வன்முறைக்குத் தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன








All the contents on this site are copyrighted ©.