2011-03-03 15:33:32

கோவாவில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கணக்கெடுப்பு சரிவர நடத்தப்படவில்லை - தலத்திருச்சபை


மார்ச்03,2011. வட இந்தியப் பகுதியில் உள்ள கோவாவில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கணக்கெடுப்பு சரிவர நடத்தப்படவில்லையென்று கோவா காங்கிரஸ் கட்சி அதிகாரிகள் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளனர்.
அண்மையில் அரசு மேற்கொண்ட மக்கள் கணக்கெடுப்பில், கப்பல்களில் பணி செய்யும் பலர் விடப்பட்டுள்ளனர் என்று கோவா காங்கிரஸ் கட்சியின் Altinho Gomes இப்புதனன்று புது டில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து கூறினார்.
இதே குறையைச் சுட்டிக் காட்டி, கோவா தலத்திருச்சபை அதிகாரிகள் இத்திங்களன்று புது டில்லியில் உள்ள மக்கள் கணக்கெடுப்பு ஆணையத்தின் அதிகாரிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் இருந்து வெளி நாடுகளில் பணி செய்யப்போகின்றவர்களில் 74 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களாய் இருக்கின்றனர் என்றும், இவர்களையும் மக்கள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் தலத்திருச்சபை கணக்கெடுப்பு ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.