2011-02-28 15:21:41

திருத்தந்தை : சமூகத்தொடர்பு சாதனங்கள் ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும்


பிப்.28,2011. சமூகத்தொடர்பு சாதனங்கள் வன்முறையை அல்ல, மாறாக ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும் எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
திருப்பீட சமூகத்தொடர்புத் துறை இத்திங்களன்று தொடங்கியுள்ள நிறையமர்வுக் கூட்டத்தில் பங்கு கொள்ளும் உறுப்பினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்த ஆன்மீக மதிப்பீடுகள் உண்மையான மனிதத் தொடர்புகளைப் பேணிக்காக்கும் என்றார்.
வன்முறையின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் இன்றைய உலகிற்கு இந்த ஆன்மீக விழுமியங்கள் இன்றியமையாதவை என்றுரைத்த திருத்தந்தை, மக்கள் பல்வேறு ஊடகத்துறைகளின் மொழிகளுக்கு மயங்கி விடாமல் இருக்குமாறு எச்சரி்த்தார்.








All the contents on this site are copyrighted ©.