கிழக்கு இந்தியாவில் இன மோதல்கள் முடிவுக்கு வருவதற்கு அசாம் பேராயர் உதவி
பிப்.24,2011. கிழக்கு இந்தியாவில் அசாம் மற்றும் மெஹாலய மாநிலங்களின் எல்லைப் பகுதியில்
பூர்வீக இனத்தவர் மத்தியில் ஏற்பட்டுள்ள பதட்டநிலைகளுக்குத் தீர்வு காண்பதற்கு குவாஹாட்டி
பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் உதவி செய்து வருகிறார். இப்பிரச்சனை தொடர்பாக பேராயர்
மெனாம்பரம்பில், ராப்ஹா மற்றும் காரோ சமூகங்களுடன் அண்மையில் நடத்திய கூட்டத்தில், நிவாரண
முகாம்களில் இருப்பவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்புவதற்கு உதவி செய்யத் தயாராக
இருப்பதாக அச்சமூகங்கள் உறுதி அளித்தன. கடந்த சனவரி தொடக்கத்தில் அசாம் மற்றும் மெஹாலய
மாநிலங்களின் எல்லைப் பகுதியில் 90 கிராமங்களில் ஏறக்குறைய 1500 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால்
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். ராப்ஹா இன இளையோர், காரோ இனத் திருமண
நிகழ்வு ஒன்றில் நடத்திய தாக்குதலையொட்டி இவ்வன்முறைகள் தொடங்கின.