உலகின் 75 விழுக்காட்டுப் பவளப்பாறைகள் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன
பிப்.24,2011. அதிகப்படியாக மீன் பிடித்தல், கடற்கரை வளர்ச்சி, தூய்மைக் கேடு உட்பட மனிதரின்
செயல்பாடுகளால் உலகின் 75 விழுக்காட்டுப் பவளப்பாறைகள் அழியும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன
என்று ஐ.நா.ஆதரவு பெற்ற அறிக்கை ஒன்று கூறுகிறது. வெப்பநிலை மாற்றம், கடல் வெப்பமடைதல்,
பெருங்கடல்களின் மட்டம் அதிகரிப்பு, போன்றவையும் இதற்குக் காரணங்களாக அவ்வறிக்கை சுட்டிக்
காட்டுகிறது. பவளப்பாறைகள் எதிர்நோக்கும் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்படாவிட்டால் 2030ம் ஆண்டுக்குள் 90 விழுக்காட்டுப் பகுதியும் 2050க்குள் முழுவதுமாகவும்
அழியும் ஆபத்தில் உள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.