2011-02-25 15:39:32

இயேசுவின் திருஇதயப் பக்தியைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் உலக மாநாடு


பிப்.24,2011. குடும்பங்களிலும் சமூகங்களிலும் இறையன்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இயேசுவின் திருஇதய பக்தி தோன்றிய இடத்தில் முதன் முறையாக உலக மாநாடு ஒன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இயேசுவின் திருஇதய பக்தி பிறந்த இடமான பிரான்ஸ் நாட்டு பார்லே மோனியால் (Paray-le-Monial) என்ற ஊரில் வருகிற அக்டோபர் 6 முதல் 11 வரை இந்த முதல் உலக மாநாடு இடம் பெறவுள்ளது.
இம்மாநாட்டை, இயேசு மற்றும் மரியின் திருஇதயங்கள் துறவு சபையினர் நடத்துகின்றனர்.
பார்லே மோனியால் என்ற ஊரிலுள்ள காட்சிகள் சிற்றாலயத்தில் அருட்திரு Mateo Crawley-Boevey என்பவர் தனது நோயிலிருந்து அற்புதமாய்க் குணமான பின்னர் இயேசுவின் திருஇதய பக்தியை உலகெங்கும் பரப்புவதற்குத் தூணடுதல் பெற்றார். 1907ம் ஆண்டில் பாப்பிறை பத்தாம் பத்திநாதர் இப்பக்தியை உலகெங்கும் பரப்புவதற்கு இக்குருவுக்கு உத்தரவு அளித்தார்.
இயேசுவின் திரு இதய நகரம் என அழைக்கப்படும் Paray-le-Monial ல் 17ம் நூற்றாண்டில் மார்கிரேட் மேரி அலகோக் (Margherita Maria Alacoque) என்னும் இளம் அருட்சகோதரிக்கு இயேசுவின் திரு இதயம் காட்சிக் கொடுத்தது.







All the contents on this site are copyrighted ©.