2011-02-25 15:52:59

WCC : அமெரிக்க ஐக்கிய நாடு இஸ்ரேல் மீதான ஐ.நா.தீர்மானத்தைத் தடுத்திருப்பதில் தவறு செய்துள்ளது


பிப்.24,2011. இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்புக்களை அமைத்து வருவதைக் கண்டிக்கும் ஐ.நா.பாதுகாப்பு அவைத் தீர்மானத்தை அமெரிக்க ஐக்கிய நாடு தடுத்து நிறுத்தியிருப்பது குறித்து WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் தனது ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 18ம் தேதியன்று இடம் பெற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு இத்தீர்மானத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு அவையின் 15 உறுப்பினர்களில் 14ம், இன்னும் 130 நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன.
இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்புக்களை அமைத்து வருவதற்கான நியாயத்தை அமெரிக்க ஐக்கிய நாடு ஏற்றுக் கொள்ளாது என்று 2010ம் ஆண்டு ஜூனில் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதற்கு தற்போதயை அந்நாட்டின் செயல்பாடு முரணாக இருக்கின்றது என்று WCC மன்றத்தின் மையக் குழு கூறியது.
மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் புதிய சவாலகளைக் களைவது குறித்த சர்வதேச கருத்தரங்கை 2012ம் ஆண்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளது WCC மன்றம்.
WCC மன்றத்தில் 349 கிறிஸ்தவ சபைகள் உறுப்பினர்களாக உள்ளன.









All the contents on this site are copyrighted ©.