2011-02-24 15:41:08

வத்திக்கானில் லெபனன் புனிதர் மரோனின் திருவுருவம்


பிப்.24,2011. மேலும், லெபனன் மாரனைட் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவிய புனித மரோனின் திருவுருவத்தைத் திருத்தந்தை ஆசீர்வதித்த நிகழ்ச்சியிலும் லெபனன் அரசுத்தலைவர் ஸ்லைமான் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய ஸ்லைமான், லெபனனில் மாரனைட் திருச்சபை ஏற்படுத்தியுள்ள அளவற்ற தாக்கத்தைப் பாராட்டினார்.
15 அடி உயரம் கொண்ட இப்புனிதரின் திருவுருவம், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவின் வெளிப்புற மாடச் சுவரில் வைக்கப்பட்டுள்ளது. இப்புதன் பொது மறைபோதகத்திற்கு முன்னர் இடம் பெற்ற இந்நிகழ்வில் லெபனன் முதுபெரும் தந்தை நஸ்ரல்லா ஸ்ஃபயர், திருப்பீடத்துக்கானத் தூதர்கள், திருப்பீடச் செயலர், இன்னும் உரோமிலும் அதைச் சுற்றிலும் வாழும் லெபனன் விசுவாசிகளும் கலந்து கொண்டனர்.
இந்த 5ம் நூற்றாண்டு சிரியத் துறவியின் எடுத்துக்காட்டை எல்லாரும் பின்பற்றுமாறு வலியுறுத்திய திருத்தந்தை, ஒருவர் தன்னையே கொடையாக வழங்கும் அளவுக்கு நற்செய்தியைச் சோர்வின்றி அறிவிக்கும் கொடைக்காகவும் ஆண்டவரிடம் மன்றாடினார்.
லெபனன் மாரனைட் ரீதி கத்தோலிக்கத் திருச்சபை, தனது நிறுவனரான புனித மரோனின் 16வது நூற்றாண்டைச் சிறப்பித்து வருவதையொட்டி வத்திக்கானில் இந்நிகழ்வு நடைபெற்றது.







All the contents on this site are copyrighted ©.