ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கோவில்
பிப்.24,2011. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் வன்முறைகளுக்கு
உள்ளான பெட்டிக்கலா (Betticala) என்ற கிராமத்தின் மக்கள் நந்தகிரி என்ற இடத்தில் மறு
குடியமர்வு செய்யப்பட்டு, அங்குள்ள ஒரு கோவிலில் அண்மையில் தங்கள் முதல் திருப்பலியைக்
கண்டனர். மூன்று ஆண்டுகளாய் தங்களுக்கென ஒரு கோவில் இல்லாமல் வருந்திய இம்மக்கள் இப்புதிய
கோவிலில் அண்மையில் நிகழ்த்திய திருப்பலியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று
அருள் சகோதரர் K J மார்கோஸ் கூறினார். கந்தமால் வன்முறைகள் தணிந்த பிறகும், தங்கள்
சொந்த ஊரான பெட்டிக்கலா கிராமத்தில் மறுபடியும் குடியேற விழைந்த கிறிஸ்தவர்களை அங்குள்ள
இந்துக்கள் அனுமதிக்காமல் விரட்டியதால், அம்மக்கள் தலத்திருச்சபையின் உதவியுடன் நந்தகிரியில்
குடியேறியுள்ளனர் என்று அருள் சகோதரர் மார்கோஸ் விளக்கினார். மீள் குடியமர்த்தப்பட்ட
மக்களுக்கு உரிய நிலங்களைப் பெற்றுத் தருவதில் அரசு இன்னும் சரியான முயற்சிகள் எடுக்காததால்,
தற்போது தலத்திருச்சபை அம்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதென்று சகோதரர் மார்கோஸ் மேலும் கூறினார்.