2011-02-22 15:45:01

பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநில கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பு.


பிப்.22, 2011. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்தின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவப் பெண்மணி ஆசியா பீபிக்கு ஆதரவாக இந்தியாவின் பஞ்சாப் மாநில கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து உண்ணா நோன்பு மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களை மேற்கொண்டனர்.

ஆசியா பீபிக்கு எதிரான மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசை வேண்டுவதாயும், தேவ நிந்தனைச் சட்டத்தை நீக்கும்படி பாகிஸ்தான் அரசை வலியுறுத்துமாறு சர்வதேச சமுதாயத்தை விண்ணப்பிப்பதாயும் இந்த எதிர்ப்புப் போராட்டம் இந்திய பாகிஸ்தான் எல்லையின் இந்தியப் பகுதியில் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானின் தேவ நிந்தனைச் சட்டத்தை தனிமனிதர்கள் தங்கள் சொந்த பகைக்குப் பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டிய அமிர்தசரஸ் ஆயர் சமந்தராய், இதனாலேயே இச்சட்டத்தை நீக்க சர்வதேச சமுதாயம் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.