2011-02-21 15:30:09

லிபியாவில் உள்ள கத்தோலிக்கர்கள் இதுவரை எந்த இடையூறுகளையும் சந்திக்கவில்லை - ஆயர் Martinelli


பிப்.21,2011. லிபியாவில் உள்ள கத்தோலிக்கர்கள் இதுவரை எந்த இடையூறுகளையும் சந்திக்கவில்லை என்று லிபியாவின் Tripoliக்கான அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli கூறினார்.

Tripoli மற்றும் Benghaziயிலுள்ள இரு கோவில்களும் இதுவரை எந்தத் தாக்குதல்களுக்கும் உள்ளாகவில்லை என்றும் கத்தோலிக்கர்கள் இக்கோவில்களுக்குச் சென்று அமைதிக்கான செபங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் ஆயர் Martinelli வத்திக்கானின் FIDES செய்தி நிறுவனத்திடம் இத்திங்களன்று கூறினார்.

பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களுக்கு உள்ளான மக்களைக் கண்காணிக்கும் பணியில் அருள்சகோதரிகள் பலரும் ஈடுபட்டிருப்பதையும் ஆயர் எடுத்துரைத்தார்.

லிபியாவில் உள்ள தலத்திருச்ச்சபை அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, பிற நாடுகளிலிருந்து அந்நாட்டில் குடியேறியுள்ள ஆசிய, ஆப்ரிக்க, மற்றும் ஐரோப்பிய கத்தோலிக்கர்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்து வருவதாக ஆயர் Martinelli மேலும் கூறினார்.

இவர்கள் அனைவருக்கும் அங்குள்ள கத்தோலிக்கக் கோவில்கள் வழிபாட்டிற்கு மட்டுமின்றி ஒருவருக்கொருவர் உறுதுணையை வளர்க்கும் முயற்சிகளுக்கும் பயன்படுகின்றனவென்று ஆயர் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.