2011-02-21 15:30:59

இறையடியார் இரண்டாம் ஜான் பால் நினைவாக ஆல்ப் மலைச் சிகரங்களில் பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டிகள்


பிப்.21,2011. போலந்து நாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டியில் அங்குள்ள கத்தோலிக்க குருக்களும் குருத்துவ மாணவர்களும் ஆர்வமாய் பங்கேற்றனர்.

பனிச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இறையடியார் இரண்டாம் ஜான் பால் நினைவாக ஆல்ப் மலைச் சிகரங்களில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இப்போட்டிகள் 1998ம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன.

கடந்த பதினான்கு ஆண்டுகளாய் பிரான்சிஸ்கன் சபை குருக்களால் நடத்தப்படும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் குருக்கள், மற்றும் குருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகி வருகிறதென்று இப்போட்டிகளை ஏற்பாடு செய்த அருள்தந்தை Gregory Szwarc கூறினார்.

இவாண்டு நடத்தப்பட்ட போட்டியில் 30 குருக்களும், 7 குருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர் என்றும், அவர்களில் அருள்தந்தை Chris Sontag மற்றும் அருள்தந்தை Henry Urbas ஆகியோர் பரிசுகள் பெற்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.