பிலிப்பின்ஸ் அரசு பிரதிநிதிகளுக்கும், ஆயர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும்
நடைபெற்ற கூட்டத்திலிருந்து ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் வெளிநடப்பு
பிப்.17,2011. இவ்வியாழனன்று, பிலிப்பின்ஸ் அரசு பிரதிநிதிகளுக்கும், பிலிப்பின்ஸ் ஆயர்
பேரவையின் பிரதிநிதிகளுக்கும் நடைபெற்ற ஒரு கூட்டத்திலிருந்து ஆயர் பேரவையின் பிரதிநிதிகள்
வெளிநடப்பு செய்தனர். குடும்ப நலம், மற்றும் குழந்தை பேறு நலம் சார்ந்த சட்டங்களை
இயற்றவிருக்கும் பிலிப்பின்ஸ் அரசு, தலத்திருச்சபையின் துணையை நாடியது. இச்சட்டங்கள்
குறித்து தலத்திருச்சபை ஏற்கனவே அரசுக்குக் கூறியிருந்த பரிந்துரைகளை இவ்வாலோசனைக் கூட்டத்தில்
அரசு பிரதிநிதிகள் சிறிதும் விவாதிக்காததால், திருச்சபை பிரதிநிதிகள் இவ்வெளிநடப்பை மேற்கொள்ள
வேண்டியிருந்ததென ஆயர் பேரவையின் வழக்கறிஞர் Jo Imbong செய்தியாளர்களிடம் கூறினார். 2009ம்
ஆண்டிலும் ஒரு முறை இவ்விவாதங்களின் பொது, ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்
என்பதை வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.குழந்தை பேறு நலம் குறித்த இந்தச் சட்டம் நன்னெறிக்கு
முரண்பட்டதென்பதால், இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதை மக்கள் எதிர்க்க வேண்டும்
என்று ஆயர்கள் ஏற்கனவே மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.