2011-02-15 14:54:02

கொலம்பியாவில் இளங்குரு ஒருவர் சுட்டுக்கொலை.


பிப் 15, 2011. கொலம்பியாவின் Rio Negro கிராமத்தில் இச்சனியன்று சுடப்பட்டு ஞாயிறன்று மருத்துவ மனையில் மரணமடைந்த குரு Luis Carlos Orozco Cardonaன் கொலை தொடர்பாக சிறுவன் ஒருவன் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு வருவதாக கொலம்பிய காவல்துறை அறிவித்தது.

Sonsón - Rionegro மறைமாவட்ட பேராலயத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம்தேதி தான் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இக்கொலை குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் வெளியிட்ட Sonsón - Rionegro மறைமாவட்ட ஆயர் Fidel Leon Cadavid Marin, இன்றைய சமுதாயத்தில் மதிப்பீடுகள் எந்த அளவு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம் என்றார். எழைகளிடையேயான தன்னலமற்ற பணிகளுக்கென தன்னை அர்ப்பணித்த குரு Luis Carlos கொல்லப்பட்டுள்ளது, மனித வாழ்வுக்கான மதிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான நம் அர்ப்பணத்திற்கு அழைப்பு விடுப்பதாக உள்ளது எனவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.