ஆஃப்கானின் மோதல்களால் உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா.
அமைப்பு கவலை.
பிப் 15, 2011. ஆஃப்கானின் மோதல்களால் உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதாக ஐ.நா. அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானில்
ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா. நிறுவனம், இவ்வுயிரிழப்புகளுக்கு முக்கிய
காரணம் தாலிபான் மற்றும் ஏனைய தீவிர வாத குழுக்கள் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த
ஆண்டில் இந்நாட்டில் 2,400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 75
விழுக்காட்டு உயிரிழப்புகளுக்கு தாலிபான் மற்றும் ஏனைய தீவிரவாத அமைப்புகளே காரணம் எனவும்
உரைக்கும் இவ்வறிக்கை, 2009ம் ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் மோதல்களால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 53 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில்
ஆஃப்கானில் மோதல் தொடர்புடைய வன்முறைகளால் 1800 குழந்தைகள் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்
எனவும் கூறும் இவ்வறிக்கை, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் குழந்தை உயிரிழப்புகளின்
எண்ணிக்கை 155 விழுக்காடு அதிகரித்திருந்ததாகத் தெரிவிக்கிறது.