2011-02-14 15:59:01

மத்தியப்பிரதேசத்தில் கொண்டாடப்பட்ட மரியன்னையின் திருவிழாவில் 20000 மக்கள்


பிப்.14,2011. மத்தியப்பிரதேசத்தின் Jhabua மறைமாவட்டத்தில் இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட மரியன்னையின் திருவிழாவில் 20000 மக்கள் கலந்து கொண்டனர்.

Jhabua மறைமாவட்டத்தின் Panchkui என்ற இடத்தில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி இரண்டாம் ஞாயிறன்று Bihl என்ற பழகுடியினரின் அன்னை என்று வழங்கப்படும் மரியன்னைக்கு விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறதென்பதற்கு இவ்வாண்டு கொண்டாடப்பட்ட இவ்விழாவில் நடைபெற்ற ஆறு கிலோமீட்டர் ஊர்வலமே சான்று என்று Jhabua மறைமாவட்ட மக்கள் தொடர்பாளர் அருள்தந்தை P A தாமஸ் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவின்போது, அன்னையின் குகைக்கு முன் வைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் பெட்டியில் ஆயிரம் ஆயிரம் விண்ணப்பங்களும் நன்றி செபங்களும் குவிகின்றன என்று Panchkui பங்குத் தந்தை John Tahir தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.