கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்
பிப்.11,2011. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட புதிய
பேராயராக, ஆயர் ஜான் பார்வாவை இவ்வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட பேராயராக இதுவரை பணியாற்றி வந்த பேராயர் இரபேல்
சீனத் பணி ஓய்வு பெறுவதைத் திருச்சபை சட்டம் 401, எண் 1 ன் படி ஏற்றுக் கொண்ட திருத்தந்தை,
அவ்வுயர்மறைமாவட்டத்திற்கு ரூர்கேலா ஆயர் ஜான் பார்வாவை நியமித்துள்ளார்.
1955ம்
ஆண்டு ஜூன் ஒன்றாந்தேதி ஒரிசாவின் காய்பிராவில் பிறந்த ஆயர் ஜான் பார்வா, இறைவார்த்தை
சபையில் சேர்ந்து 1985ம் ஆண்டு குருவானார். 2006ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி ரூர்கேலா மறைமாவட்ட
வாரிசு ஆயராகப் பொறுப்பேற்ற இவர், 2009ம் ஆண்டு ஏப்ரல் 02ம் தேதி அம்மறைமாவட்ட ஆயராக
நியமிக்கப்பட்டார். இவ்வெள்ளிக்கிழமை கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட புதிய பேராயராக
நியமிக்கப்பட்டுள்ளார் ஆயர் ஜான் பார்வா.
பணி ஓய்வு பெறும் பேராயர் இரபேல் சீனத்,
1934ம் ஆண்டு கேரளாவின் மணலூரில் பிறந்தவர். 1974ல் சம்பல்பூர் ஆயராகப் பணியைத் தொடங்கிய
இவர் 1985ம் ஆண்டு ஜூலை ஒன்றாந்தேதி கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியைத்
தொடங்கினார்