2011-02-11 16:26:23

இந்தோனேசிய அரசு கிறிஸ்தவர்களையும் பிற சிறுபான்மை மதத்தவரையும் பாதுகாப்பதற்கு தவறியுள்ளது - ஆயர் கண்டனம்


பிப்.11,2011. இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்களையும் மற்றும் பிற சிறுபான்மை மதத்தவரையும் பாதுகாப்பதற்கு அரசு தவறியுள்ளது என்று அந்நாட்டு அரசு அதிகாரிகளை வன்மையாய்ச் சாடியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

கடந்த வாரத்தில் 1500 முஸ்லீம்கள் கொண்ட கும்பல் மூன்று ஆலயங்களையும் ஒரு கருணை இல்லத்தையும் ஒரு மருத்துவமனையையும் தாக்கி அழித்ததைத் தொடர்ந்து இவ்வாறு அரசு அதிகாரிகளைக் குறை கூறினார் அந்நாட்டு ஆயர் பேரவையின் பல்சமய ஆணையத் தலைவர் ஆயர் Petrus Canisius Mandagi.

வன்முறைக்கு முடிவு கட்ட அரசு அறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்திய ஆயர், கிறிஸ்தவர்களும் பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டு மன்னிப்பில் வளருமாறு கேட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.