பிப்.11,2011. இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர் பிநாயக் சென் என்பவருக்குப் பிணையல் வழங்க
சட்டீஸ்கார் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பதற்குக் கிறிஸ்தவத் தலைவர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
மருத்துவரான சென், இந்த மேற்கு இந்திய மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு
உதவினார் என்று குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
இவரது
வழக்கை இவ்வியாழனன்று விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, சென், மாவோயிஸ்டுகளுடன்
தொடர்பு கொண்டுள்ளார் என்றும் கூறியது.
இது குறித்துப் பேசிய இந்திய ஆயர் பேரவையின்
நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர் அருட்திரு சார்லஸ் இருதயம், ஏழைகள் மற்றும் நலிந்தோரின்
நலவாழ்வுக்காக உழைக்கும் எவரும் இந்தத் தீர்ப்பை குறை கூறுவர் என்றார்.