அயர்லாந்தில் குற்றவியல் அமைப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் உடனடியாகத் தேவை - ஆயர்கள்
பிப்.11,2011. அயர்லாந்து நாட்டில் குற்றவியல் அமைப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் உடனடியாக
இடம் பெற வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய
சித்ரவதை தடுப்புக் குழு, அயர்லாந்து சிறைகளின் நிலைமை குறித்துக் கடுமையாய் விமர்சித்து
அறிக்கை வெளியிட்டுள்ளதை வரவேற்றுள்ள அந்நாட்டுச் சிறைகளுக்கான ஆன்மீகக் குருத் தலைவர்
அருட்திரு Ciaran Enright, அந்நாட்டின் பல்வேறு சிறைகள் கீழ்த்தரமான மற்றும் ஆபத்தான
நிலைகளில் இருப்பதாகக் கூறினார்.
அயர்லாந்து சிறைகளில் 2006ம் ஆண்டில் 3,191 ஆக
இருந்த கைதிகளின் எண்ணிக்கை 2010ம் ஆண்டில் 5,456 ஆக உயர்ந்துள்ளது என்றும் அக்குரு
குறிப்பிட்டார்