2011-02-10 16:09:41

நாக்பூர் உயர்மறைமாவட்டத்தின் உதவித் திட்டங்களால் காப்பாற்றப்பட்டிருக்கும் 600 விவசாயக் குடும்பங்கள்


பிப்.10,2011. திருச்சபையின் உதவித் திட்டங்கள் இல்லையெனில் நான் இன்று உயிருடன் இருந்திருக்க முடியாது என்று ஓர் இந்திய விவசாயி கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பாவைச் சேர்ந்த பாலாஜி சனேஸ்வர் என்ற விவசாயி, தொடர்ந்து தன் சாகுபடி பொய்த்ததால் தற்கொலை வரை செல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, நாக்பூர் உயர்மறைமாவட்டத்தின் உதவித் திட்டங்களால் தானும் தன் குடும்பமும் காப்பாற்றப்பட்டிருப்பதாக UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

சனேஸ்வர் குடும்பத்தைப் போல, 600 விவசாயக் குடும்பங்கள் நாக்பூர் தலத்திருச்சபையின் முயற்சிகளால் காப்பற்றப்பட்டிருப்பதாக UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.

தலத்திருச்சபையின் இத்திட்டத்தின் மூலம், சாகுபடி பொய்த்துப்போனதால் வறுமையில் சிக்கியுள்ள இக்குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் 800 ரூபாய் தரப்படுவதாக இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் அருள் சகோதரி அஞ்சனா தெரேஸ் கூறினார்.

மகாராஷ்டிரா மாநில அரசு அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அம்மாநிலத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் 4,427 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். உண்மையான எண்ணிக்கை இதைபோல் குறைந்தது மூன்று மடங்கு அதிகம் இருக்கும் என்று சமூகநல ஆர்வலர்கள் பலர் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.