2011-02-09 15:42:23

குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில வேண்டும் - ஆயர் Valence Mendis


பிப்.09,2011. இலங்கையில் குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கள மாணவர்களைத் தமிழ் மொழியையும் பயிலும் படி அந்நாட்டு ஆயர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Chilaw மறைமாவட்டத்தின் ஆயர் Valence Mendis, தன் மறைமாவட்டத்தில் குருமடங்களில் உள்ளவர்களை தமிழ் கற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறார்.
தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்தில் தன் குருத்துவ மாணவர்களை திரிகோணமலை-மட்டகளப்பு மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளுக்கு அனுப்பி வருவதாக ஆயர் Mendis கூறினார்.Chilaw மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்கர்களில் பாதி பேர் தமிழர்கள் என்றும், அவர்களுக்குத் தகுந்த முறையில் பணி செய்வதற்கு தமிழ் மொழி இன்றியமையாததென்றும் கூறிய ஆயர் Mendis, குருமடத்தில் வாரம் ஒரு முறை தமிழ் திருப்பலிகள் நிறைவேறவும் தான் ஏற்பாடுகள் செய்துள்ளதாகக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.