இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த சிறப்பு இணையதளம்
பிப்.09,2011. வருகிற மே மாதம் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திபேறு
பெற்றவராக உயர்த்தப்படவுள்ள இவ்வேளையில், அவர் முத்திபேறு பெற்றவராகவும், புனிதராகவும்
உயர்த்தப்படுதலை மையப்படுத்திய ஒரு சிறப்பு இணையதளத்தை உரோம் மறைமாவட்டம் துவங்கியுள்ளது. www.karol-wojtyla.org
என்ற இவ்விணையத்தளம் இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானியம் உட்பட ஏழு மொழிகளில்
உள்ளது. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த பல்வேறு தகவல்களைக் கொண்ட இவ்விணையதளத்தில்
அவரது கல்லறையிலிருந்து நேரடி ஒளிபரப்பையும் பார்க்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற
மேமாதம் முதல் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும்
நிகழ்ச்சியைக் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு காணப்படுகின்றன. உரோம் நகரின் Circus Maximus
என்ற ஒரு பழங்கால பந்தயத் திடலில் ஏப்ரல் 30 இரவு திருவிழிப்புத் திருவழிபாடு நடைபெறும்
என்று கூறப்பட்டுள்ளது.இவ்விணையதளத்தின் மூலம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த
தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.