சிறுபான்மை மதத்தவர்க்கான அமைச்சகத்தை நீக்க பாகிஸ்தான் அரசு திட்டம்.
பிப் 08, 2011. சிறுபான்மை மதத்தவர்க்கானப் பாகிஸ்தான் அமைச்சகத்தை நீக்கி விட்டு அதனை
மத விவகார அமைச்சகத்தின் கீழ் ஒரு துறையாக மட்டும் மாற்றும் திட்டம் பாகிஸ்தான் அரசிடம்
இருப்பதாக திருச்சபையின் FIDES செய்தி நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.
கத்தோலிக்க
அமைச்சர் Shahbaz Bhattiயாவின் தலைமையின் கீழ் செயல்பட்டுவந்த அமைச்சகத்தை மூடுவது என்பது,
சிறுபான்மை மதத்தவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும், தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிரானக்
குரலை ஒடுக்குவதாகவும், மனித உரிமைகள் பொறுத்தவரையில் பின்னோக்கிச் செல்வதாகவும் உள்ளது
என்கிறது இக்கத்தோலிக்க செய்தி நிறுவனம்.
சிறுபான்மை மதத்தவர்க்கான அமைச்சகம்
அரசால் நீக்கப்பட்டாலும், சிறுபான்மை சமூகத்திற்கான போராட்டத்திலும், தேவநிந்தனைச் சட்டத்திற்கான
எதிர்ப்பிலும் தலத்திருச்சபையிடம் எவ்வித மாற்றமும் இருக்காது என்றார் பாகிஸ்தானின் லாகூர்
பேராயர் லாரன்ஸ் சல்தான்ஹா.