கியூபாவில் மேலும் இரண்டு அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் - ஹவானா
கர்தினால்
பிப்.05,2011. கியூபாவில் மேலும் நான்கு அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்
என்று தலைநகர் ஹவானா கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அலமினோ கூறினார்.
பல அரசியல் கைதிகள்
விடுதலை செய்யப்படுவதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை தொடர்ந்து செயல்பட்டு வரும்வேளை,
சுமார் அறுபது அரசியல் கைதிகள் விடுதலையாகி ஸ்பெயினுக்குச் செல்வதற்கு இசைவு தெரிவித்துள்ளனர்
என்று கூறப்படுகிறது.
தற்சமயம் மேலும் 4 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று
தலத்திருச்சபை கூறியுள்ளது.
இந்த நான்கு பேரில் ஒருவரானவும், ஸ்பெயினுக்குச்
செல்ல மறுத்த முக்கிய அரசியல் கைதியுமான Guido Sigler என்பவரை இச்சனிக்கிழமை அரசு விடுவித்துள்ளது
என்று செய்திகள் வெளியாகியுள்ளன.