பிப்.04,2011. பிலிப்பைன்சில் கருக்கலைப்புக்கு ஆதரவானச் சட்டம் கொண்டுவரப்படக்கூடிய
சூழல் உருவாகியுள்ளவேளை அதனை நிறுத்துவதற்குச் சிறைக்கும் செல்வதற்கும் தயாராக இருப்பதாக
அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
இனப்பெருக்கம் பற்றிய நலவாழ்வு மசோதா,
சட்டமாக அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறும் பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத்
தலைவர் ஆயர் Arturo Bastes, இதற்கு எதிராக அரசுக்கு ஒத்துழையாமை போராட்டத்திற்கும் அழைப்பு
விடுத்துள்ளார்.
அரசின் இந்த அறநெறிக்கெதிரான செயலுக்கு எதிராகக் குருக்களும்
ஆயர்களும் சிறை செல்லவும் தயார் என்றும் ஆயர் கூறினார்.
பிலிப்பைன்சில் கருக்கலைப்புக்கு
ஆதரவாக நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச அமைப்புகள், அரசுக்கு 90 கோடி டாலருக்கு மேற்பட்ட
நிதி உதவி வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.