தலித் கிறிஸ்தவர்களைக் கவர கேரளாவின் பொதுவுடைமை கட்சியினரின் முயற்சிகள்
பிப்.03,2011. கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களைப் பிரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
என்று கிறிஸ்தவ குழுக்கள் கூறியுள்ளன. இப்புதனன்று கேரளாவின் கோட்டயத்தில் நடைபெற்ற
பொதுவுடைமை கட்சியினரின் மாநாட்டில் கலந்து கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்கள்
அழைக்கப்பட்டிருந்தனர். பல நூற்றாண்டுகள் ஆகியும் மேல்ஜாதி கிறிஸ்தவர்கள் தலித்துக்களைத்
தங்களுடன் சரிசமமாய் நடத்துவதில்லை என்றும், அவர்களுக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய
உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் தலைவர் Pinarayi Vijayan கூறினார்.பொதுவுடைமை
கட்சித் தலைவர்களின் இந்தப் புதிய ஆர்வம் தங்களுக்குச் சந்தேகங்களை எழுப்புகிறதென்று
தலித் கிறிஸ்தவத் தலைவர் Joseph Thomas, UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.