கர்நாடகாவில் வெளியிடப்பட்ட Somashekharaஅறிக்கையை எதிர்த்து
மங்களூர் மறைமாவட்டம் மேல்முறையீடு செய்யும்
பிப்.03,2011. அண்மையில் கர்நாடகாவில் வெளியிடப்பட்ட Somashekhara அறிக்கைக்கு மங்களூர்
மறைமாவட்டம் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அது குறித்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும்
அறிவித்துள்ளது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில்
அரசுக்கும், இந்துத் தீவிரவாதக் குழுக்களுக்கும் தொடர்பு இல்லையென்று கூறும் Somashekhara
அறிக்கை சென்ற வாரம் வெளியானது. இந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்றும், இது
குறித்து இந்திய அரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அதிகாரப்பூர்வமான எதிர்ப்புக்களைத்
தெரிவிக்க உள்ளதாகவும் மங்களூர் மறைமாவட்ட ஆயர் Aloysius Paul D'Souza கூறினார்.சனவரி
28 அன்று வெளியான இவ்வறிக்கையைக் குறித்து இச்செவ்வாயன்று மங்களூரில் கிறிஸ்தவத் தலைவர்களும்,
சட்ட வல்லுனர்களும் சந்தித்தபின் இம்முடிவு எடுக்கப்பட்டது என்று கூறிய மங்களூர் ஆயர்,
இவ்வறிக்கையை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகத் தெரிவித்தார்.