2011-02-01 16:00:25

இந்தியாவில் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம், புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளது


பிப்.01,2011. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் இடையே இடம் பெற்ற கூட்டம், ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்வதற்கு உதவியுள்ளது என்று இந்திய மறைமாவட்ட குருக்கள் அவையின் செயலர் அருட்திரு ஜான் குழந்தை தெரிவித்தார்.

குருக்களின் பணி நிலைமைகள், அவர்களுக்கானப் பராமரிப்பு போன்றவை குறித்த அவர்களின் மனக்குறைகளை அகற்றும் நோக்கத்தில் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ கூட்டிய கூட்டத்தில் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டதாகவும் அருட்திரு ஜான் குழந்தை கூறினார்.

ஒவ்வோர் ஆயரும் தங்கள் குருக்களின் தேவைகள் குறித்து அக்கறையுடன் இருக்கிறார் என்றும் அவர்களின் நியாயமான தேவைகள் நிறைவேற்றப்படுவதற்குத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார் என்றும் இக்கூட்டத்தில் தெரிவித்தார் பேராயர் கொர்னேலியோ.







All the contents on this site are copyrighted ©.