பூட்டானில் மறைப்பணியாற்ற கத்தோலிக்க மறைபோதகர்கள் தயாராக இருக்குமாறு வத்திக்கான்
செய்தி நிறுவனம் அழைப்பு
சன.29,2011. பூட்டானில் கிறிஸ்தவர்கள் பதிவு செய்வது ஏற்கப்படும் என்று அந்நாட்டு அரசு
முதன்முறையாக அறிவித்துள்ள வேளை, அந்நாட்டில் விசுவாசக் குழுக்களை அமைப்பதற்கு கத்தோலிக்க
மறைபோதகர்கள் தயாராய் இருப்பதாக வத்திக்கான் Fides செய்தி நிறுவனம் கூறியது. பூட்டான்
அரசு விசா அனுமதி வழங்கியவுடன் அங்குச் செல்வதற்கு இந்தியாவிலுள்ள இரண்டு துறவற சபைகள்
தயாராக இருப்பதாக அச்செய்தி நிறுவனம் கூறியது தெற்கு ஆசியாவில் சிறிய நாடாகிய பூட்டானில்
புத்த மதத்தினரும் இந்துக்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் அங்கு வாழும் சுமார் ஆறாயிரம்
கிறிஸ்தவரில் சுமார் ஆயிரம் பேரே கத்தோலிக்கர் என்றும் வத்திக்கான் செய்தி நிறுவனம் கூறியது.