2011-01-29 15:48:34

எகிப்து கிறிஸ்தவர்களுக்காக இலண்டனில் செபம்


சன.29,2011. எகிப்து கிறிஸ்தவர்களின் நல்வாழ்வுக்காக இலண்டனில் கிறிஸ்தவர்கள் இச்சனிக்கிழமை மாலை செப வழிபாட்டை நடத்தினர்.
2010 மற்றும் 2011ம் ஆண்டின் தொடக்கத்தில் எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் குண்டு வீசித் தாக்கப்பட்டதில் 23 பேர் இறந்தனர் மற்றும் 80 பேர் காயமடைந்தனர்.
எகிப்தில் பேச்சுச் சுதந்திரம், தகவல் சுதந்திரம், கூட்டம் நடத்தச் சுதந்திரம் உட்பட உரிமை கேட்டு வெடித்துள்ள தற்போதைய கொந்தளிப்புகளில் அந்நாட்டு அரசு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு ஐ.நா.அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். எகிப்தில் அரசியல் எதிர்ப்பாளர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.