புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களை அகற்றுவதற்கு உலக வணிகத் தலைவர்களுக்கு பான் கி மூன்
அழைப்பு
சன.28,2011. உலகில் இடம் பெறும் இறப்புகளில் அறுபது விழுக்காடு புற்றுநோய், இதய நோய்,
stroke போன்ற நோய்கள் காரணமாக இருக்கும்வேளை இந்த நோய்க்கானக் காரணிகளைக் களைவதற்கு உலக
வணிகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு பான் கி மூன் கேட்டுள்ளார்.
தாவோ-உலகப்
பொருளாதார மாநாட்டில் இவ்வாறு பேசிய மூன், 2030ம் ஆண்டுக்குள் இந்நோய்கள் வளரும் நாடுகளில்
மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்தார்.
இந்நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் 3
கோடியே 50 இலட்சம் பேர் இறக்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் 70 வயதுக்கு உட்பட்டவர்கள்
என்றுரைத்த மூன், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவையும் இவற்றில்
உள்ளடங்கும் என்றார்.
தொற்று நோய்கள் அல்லாத இந்த நோய்களைத் தடுப்பது மற்றும்
கட்டுப்படுத்துவது குறித்த உயர்மட்ட அளவிலானக் கூட்டத்தை வருகிற செப்டம்பரில் நியுயார்க்கி்ல்
ஐ.நா.பொது அவை நடத்தும் என்றும் மூன் அறிவித்தார்.
நாடுகள் மற்றும் அரசுகளின்
தலைவர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டம் பற்றிப் பேசிய அவர், இந்நோய்களைக் கட்டுப்படுத்தப்
பொது மற்றும் தனியாரின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
இதில் கூறினார்.காரணமாக
இருக்கும்வேளை இந்த நோய்க்கானக் காரணிகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.