2011-01-28 16:01:19

உணவுப் பொருட்கள் விலையேற்றம் குறித்து உலகத் தலைவர்கள் எச்சரிக்கை


சன.28,2011. உலகில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது சமூகப் பதட்டநிலைகளுக்கும் பொருளாதாரப் போருக்கும்கூட இட்டுச் செல்லும் என்று உலகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டு தாவோவில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய இந்தோனேசிய அரசுத் தலைவர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ, உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகையோடு வளங்கள் பற்றாக்குறையும் போட்டி போடுவதால் இந்நிலை மோதல்களுக்குக் காரணமாக அமையக்கூடும் என்று குறிப்பிட்டார்.

தற்போது 700 கோடியாக இருக்கும் உலக மக்கள் தொகை 2045ம் ஆண்டுக்குள் 900 கோடிக்குமேல் உயரக்கூடும் என்றும் யுதோயோனோ கூறினார்.

ஜி20 பொருளாதார மாநாட்டிற்கும், ஜி8 நாடுகளின் பொருளாதாரக் கூட்டத்திற்கும் தலைமை வகித்துள்ள ப்ரெஞ்சி அரசுத்தலைவர் நிக்கோலாஸ் சர்கோசி பேசுகையில், விலைவாசிகளில் சரிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இம்மாதம் 26 முதல் 30 வரை இம்மாநாடு நடைபெறுகின்றது







All the contents on this site are copyrighted ©.