மத்திய கிழக்குப் பகுதி் கிறிஸ்தவர்களைப் பின்பற்றுமாறு வெனிசுவேலா கர்தினால் அழைப்பு
சன.27,2011. வளர்ந்து வரும் மதச் சார்பற்றப் போக்குகளுக்கு மாற்றாக, தங்கள் விசுவாசத்தை
வளர்க்க மத்திய கிழக்குப் பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களைப் பின்பற்றுமாறு வெனிசுவேலா
நாட்டின் கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.
இவ்வாரத்தில் நிறைவுற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு
வாரத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய Caracas உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால்
ஹோர்சே உரோசோ சவினோ இச்சிறப்பு அழைப்பினை வெனிசுவேலா கத்தோலிக்கருக்கு விடுத்தார்.
உண்மையான
இஸ்லாமியக் கொள்கைகளை விட்டு விலகி இருக்கும் அடிப்படைவாதக் குழுக்களால் ஈராக், எகிப்து
ஆகிய நாடுகளில் வளரும் வன்முறைகளைச் சுட்டிக் காட்டிய கர்தினால் சவினோ, மேற்கத்தியக்
கலாச்சாரத்தால் பரவிவரும் மதச் சார்பற்ற கொள்கைகளும் ஒரு வகையில் அடிப்படைவாதமே என்று
எடுத்துரைத்தார்.
திருமணத்தின் புனிதம், மனித உயிர்களைப் பேணுதல் ஆகியக் கொள்கைகளை
வளர்க்கும் திருச்சபைக்கு எதிராக வளர்ந்து வரும் மேற்கத்திய, மதச் சார்பற்றக் கலாச்சாரமும்
ஒருவகையில் வன்முறையைப் புகுத்துகின்றது என்றும் கர்தினால் கூறினார்.