மக்களின் வரிப்பணம் கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படக்கூடாது - அமெரிக்க ஆயர்கள்
சன.26, 2011. மக்களின் வரிப்பணம் கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படக் கூடாதென்று அமெரிக்க
ஆயர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தை கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படுவதை
எதிர்த்தும், மக்களின் நலவாழ்வுத் துறையில் பணிபுரிவோரின் மனசாட்சியை பாதுகாக்கும் வகையிலும்
அமெரிக்க அரசின் பாராளுமன்றத்தில் மூன்று சட்ட வரைவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த
சட்டங்கள் குறித்த விவாதங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்நேரத்தில்,
அவர்களுக்கு அமெரிக்க ஆயர் பேரவையின் உயிர்காக்கும் செயல்பாடுகள் குழுவின் சார்பில்
கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.இக்குழுவின் சார்பாக, இக்கடிதங்களை Galveston -Houston பேராயர்
கர்தினால் Daniel DiNardo அனுப்பியுள்ளார்.