2011-01-26 15:31:06

நற்செய்தி அறிவிப்புக்கானப் புதிய உலகக் கருத்தரங்கு


சன.26,2011. கத்தோலிக்கருக்கும் மத நம்பிக்கையற்றவர்களுக்கும் இடையே உரையாடலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் திருப்பீடக் கலாச்சார அவை சர்வதேச கருத்தரங்கு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
"புறவினத்தாரின் முற்றம்" என்ற பெயரில் வத்திக்கானின் இத்தகைய புதிய முயற்சிகளும் கருத்தரங்கும் வருகிற மார்ச் 25ம் தேதி பாரிசில் தொடங்கப்படும் என்று இவ்வவை இச்செவ்வாயன்று நிருபர்களுக்கு வெளியிட்ட செய்தி கூறுகிறது.பாரிசிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், "மதம், அறிவொளி, பொதுவான காரணம்" என்ற தலைப்பில் சொற்பொழிவுகள் இடம் பெறும்.







All the contents on this site are copyrighted ©.