ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் ஏழு குருக்களும் 300 விசுவாசிகளும் கத்தோலிக்க திருச்சபையில்
இணைய விருப்பம்.
சன 24, 2011. இங்கிலாந்தின் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஏழு குருக்களும்
300 விசுவாசிகளும் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக
Brentwood மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை ஒரு காலத்தில்
கத்தோலிக்கத் திருச்சபையோடு பகிர்ந்து வந்த பாரம்பரியங்களிலிருந்து விலகிச்செல்வதால்
கவலையுற்றுள்ள மக்களே கத்தோலிக்கத் திருச்சபையுடன் இணைவதில் ஆர்வம் காட்டி வருவதாக உரைத்த
Brentwood ஆயர் தாமஸ் மெக்மஹொன், இது ஒரு துணிவான முடிவு என்றார்.
300 ஆங்கிலிக்கன்
கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க மதத்தில் இணைவது, இழப்பின் வருத்தத்தை தனக்கு தருகின்றபோதிலும்,
அக்கிறிஸ்தவர்களின் விருப்பத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்தார் Chelmsford ஆங்கிலிக்கன்
ஆயர் Stephen Cottrell.