பிரேசிலில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஆயர்கள் தீவிர ஈடுபாடு
சன.22,2011. பிரேசிலின் ரியோ தெ ஜெனியெரோ மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான
நிவாரண உதவிகளைச் செய்வதில் அப்பகுதியின் இரண்டு ஆயர்கள் கடுமையாய் உழைத்து வருகின்றனர்
என்று கூறப்படுகிறது.
இவ்வியாழனன்று ரியோ தெ ஜெனியெரோ மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி
இதுவரை 765 பேர் இறந்துள்ளனர்.
வெள்ள நிவாரணப் பணிகள் பற்றிப் பேசிய ஆயர் பிலிப்போ
சாந்த்தோரோ, இத்தகைய சூழல்களில் இத்தனை இறப்புக்கள் இதுவரை இடம் பெற்றதில்லை என்றும்
இதனால் மக்களிடமிருந்து கேட்கும் உதவிகளை நிறுத்த முடியவில்லை என்றும் கூறினார்