இந்திய விவசாயிகள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன
சன.22,2011. இந்திய விவசாயிகள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் வேளை, 2009ம் ஆண்டில்
சுமார் 1,27,151 பேர் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர் என்று தேசியக் குற்றப்பிரிவு அலுவலகம்
வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இவ்வெண்ணிக்கை 2008ம் ஆண்டைவிட 1.7 விழுக்காடு அதிகம்
என்றும் ஒரு நாளைக்கு 47 பேர் வீதம் குறைந்தது 17,368 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்
என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
2011ம் ஆண்டின் முதல் இரண்டு வார நிலவரத்தை
நோக்கும் போது இதில் எந்த மாற்றமும் தெரியவில்லை என்று கூறும் திருச்சபை அதிகாரிகள்,
இந்த நிலை நிறுத்தப்படுவதற்கு அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்