சன.21,2011: கிறிஸ்தவ மறைபோதச் செயல்பாடுகள் சபைகளுக்கிடையேயான மதிப்பு போன்றவை குறித்த
உலகக் கிறிஸ்தவத் தலைவர்களின் கூட்டம் தாய்லாந்தில் இம்மாதம் 25 முதல் 28 வரை நடைபெறவிருக்கின்றது.
பாங்காக்கில்
இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில், கத்தோலிக்கத் திருச்சபை, WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள்
மன்றம், WEA என்ற உலக இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஐம்பது பிரதிநிதிகள் கலந்து
கொண்டு கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து செய்யும் திட்டங்கள் குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.
இத்தகைய
முதல் கூட்டம் இத்தாலியின் லாரியானோவில் மதமாற்றம் குறித்து நடைபெற்றது.