2011-01-21 15:55:16

இயேசு குறித்த திருத்தந்தையின் இரண்டாவது நூல் மார்ச் 15 ல் வெளியிடப்படுகிறது


சன.21,2011: திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய “Jesus of Nazareth,” அதாவது “நாசரேத்தூர் இயேசு” என்ற நூலின் இரண்டாம் பாகம் இவ்வாண்டு தபக்காலத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற மார்ச் 15ம் தேதி வெளியிடப்படும் இந்தப் புத்தகம், இயேசு கிறிஸ்து எருசலேமில் நுழைந்தது முதல் அவரது பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்புப் பற்றியதாக இருக்கும் என்றும், இதனை அமெரிக்க ஐக்கிய நாட்டில் இக்னேஷியஸ் அச்சகம் வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நிருபர் Peter Seewald என்பவர், திருத்தந்தை 16ம் பெனடிக்டுடன் இருபது மணி நேரம் நடத்திய பேட்டியில் திருத்தந்தை கூறிய கருத்துக்கள் அடங்கிய நூல் "Light of the Word: The Pope, the Church and the Signs of the Times"என்ற தலைப்பில் கடந்த நவம்பரில் வெளியானது. அது வெளியான இரண்டு மாதங்களுக்குள் இருபது மொழிகளில் சுமார் பத்து இலட்சம் பிரதிகள் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.