2011-01-20 14:56:40

கடந்த 37 ஆண்டுகளில் அமெரிக்காவின் மருத்துமனை கருக்கலைப்புகள் வழி 6 கோடி உயிர்கள் இழப்பு.


சன.20, 2011. கருக்கலைப்புக்கு ஆதரவான அமெரிக்க ஐக்கிய நாட்டின் 1973ம் ஆண்டு தீர்ப்பிற்குப் பின் அந்நாட்டின் மருத்துவமனைகள் வழி இதுவரை 6 கோடி கருக்கலைப்புகள் இடம்பெற்றுள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ராபர்ட் ஃபின்.

மனித வாழ்வை அழிக்கும் கருக்கலைப்பு எனும் நடவடிக்கைக்குத் தங்கள் ஆதரவை வழங்கும் அரசு அதிகாரிகளுக்குத் தலத்திருச்சபையின் ஆதரவு இல்லை என்றார் ஆயர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்வுக்கு ஆதரவான ஊர்வலம் இச்சனியன்று இடம்பெற உள்ளதை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர் ஃபின், கடந்த 37 ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் 6 கோடி உயிர்கள் கருவிலேயே கொல்லப்பட்டுள்ளது குறித்த கவலையையும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.