நூற்றாண்டு காணும் புனித தெரேசா கழகத்திற்குத் திருத்தந்தை பாராட்டு
சன.18,2011: கிறிஸ்தவ வாழ்க்கையைச் சரியாக வாழ்வதற்கு ஏற்பட்ட ஆர்வத்தின்பேரில் புனித
தெரேசா கழகம் தொடங்கப்பட்டது என்ற தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட்
ஸ்பெயினில் 1911ம் ஆண்டு புனித Pedro Poveda என்பவரால் தொடங்கப்பட்ட
புனித தெரேசா கழகத்தின் நூற்றாண்டு விழாவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை,
புனித தெரேசா ஆன்மீகக் குடும்பத்தின் கிறிஸ்தவ வாழ்வைப் பாராட்டினார்.
இந்தக்
கழகமானது தற்சமயம் முப்பது நாடுகளில் தனது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.